திருகோணமலை கடற்கரையில் குவிந்த மர்ம பொருள்

திருகோணமலை கடற்கரையில் நேற்றிரவு முதல் தார் போன்ற விசித்திரமான பொருள் ஒன்று குவிந்து வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர். தார் போன்ற பொருட்கள் சிறு துண்டுகளாகவும், கட்டிகளாகவும் வருவதாகவும் அவை ஒட்டும் தன்மை கொண்டதாக உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். தார் கட்டிகள் போன்ற வெளிநாட்டு பொருட்கள் வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களில் ஒட்டிக் கொள்வதாவும் சிறு குழந்தைகள் கூட கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை திருகோணமலை கடற்கரையில் ஏற்பட்டுள்ளது.